Skip to main content

"ஒரு வாரமாக அழுது கொண்டிருக்கிறேன்" - எமோஷனலாக பேசிய சதா

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

sadha emotional speech abou his hotel

 

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை சதா. பின்பு விக்ரமின் 'அந்நியன்', அஜித்தின் 'திருப்பதி', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்பு தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த சதா கடைசியாக 2018 இல் வெளியான 'டார்ச்லைட்' படத்தில் நடித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு மும்பையில் 'எர்த்லிங்ஸ் கபே' என்ற பெயரில் ஒரு ஹோட்டலை தொடங்கினார். பின்பு அதிலே தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்தார். 

 

இந்நிலையில் அந்த ஹோட்டலை திடீரென்று இடத்தின் உரிமையாளர் காலி செய்ய சொல்லியுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "23 ஏப்ரல் 2019 அன்று இந்த ஹோட்டலை திறந்தோம். மிகவும் காதலித்து நடத்தி வந்தேன். தினமும் 12 மணி நேரம் அந்த ஹோட்டலிலே செலவழித்தேன். கடந்த ஏப்ரல் 23 அன்று அந்த இட உரிமையாளர் ஃபோன் செய்து இடத்தை காலி செய்ய சொல்லி கேட்டார். நான் எவ்வளவோ முயற்சித்தேன். அவர் மனம் மாறும் படி தெரியவில்லை.  வாடகையும் சரியாக கட்டி வந்தேன். ஆனால் இட உரிமையாளர் சொல்லிவிட்டதால் இம்மாத இறுதியில் காலி செய்யவுள்ளேன். இதனால் கடந்த ஒரு வாரமாக அழுது கொண்டிருக்கிறேன்" என அழுதபடி பேசினார். 

 

மேலும் எமோஷனலாக ஹோட்டலை பற்றி பல நினைவுகளை பகிர்ந்த சதா, தனது வழக்கமான வாடிக்கையாளர்களை இந்த மாதத்திற்குள் தங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadaa (@sadaa17)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.