Skip to main content

ரூ. 400 கோடி வாங்கி முதலிடத்தை பிடித்த ஸ்கார்லட் ஜொஹன்சன் ... 

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

கடந்த வருடத்திற்கான அதிக சம்பளம் பெற்றுள்ள நடிகர் பட்டியலை அண்மையில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் wwe மல்யுத்த வீரராக உலகப் புகழ்பெற்ற தி ராக் என்று அழைக்கப்படும் டுவேன் ஜான்ஸன் முதலிடத்தை பெற்றுள்ளார். அவர் 600 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கிறிஸ் ஹெர்ம்ஸ்வொர்த், ராபர்ட் டவுனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரே ஒரு இந்திய நடிகரான அக்‌ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். 
 

scarlette johanSon

 

 

இந்நிலையில் போர்ப்ஸ் நிறுவனம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்கார்லட் ஜொஹன்ஸன். இவர் பிளாக் வீடோவ் படத்தில் நடிப்பதற்காக சுமார் 54 மில்லியன் டாலர் பெற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய். இரண்டாம் இடத்தை சோபியா வெர்ஜேரா ரூ. 315 கோடி சம்பளம் வாங்கி பிடித்துள்ளார். ரீஸ் வித்தர்ஸ்பூன் - ரூ. 250 கோடி, நிகோல் கிட்மேன் - ரூ. 243 கோடி, ஜென்னிபர் அனிஸ்டன் - ரூ. 200 கோடி. 
 

இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளான தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ராஷ்மிகா!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Rashmika Mandanna in 2024 Forbes India list of 30 under 30

ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பிரிவான ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ 2014 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் இருக்கும் நிலையில், பொழுதுபோக்கு துறையில் ராஷ்மிகா மந்தனா(27) மற்றும் ராதிகா மதன் (28) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இசைத் துறையில் அதிதி சைகல் (25) என்கிற பாடகி இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் கடந்த வருடம் வாரிசு, மிஷின் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Next Story

உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரர் கவுதம் அதானி

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Gautham Adani is the 2nd richest person in the world!

 

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உயர்ந்துள்ளார். 

 

ஃபோர்ப்ஸ் இதழின் பெருமை பணக்காரர் பட்டியலின் படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளியுள்ளார் அதானி. 

 

அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், அவருடைய சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், சுரங்கம், உள் கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வர்த்தகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.