நடிகர் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் மற்றும் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படங்களில் நடித்து வருகிறார். இதில் சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் சாமி ஸ்கொயர் படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் விகாரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த கோட்டா ஸ்ரீனிவாசராவ் மகனாக பாபிசிம்ஹா நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தில் நடிகர் விக்ரம் அப்பா, மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தில் ஆறு சாமி கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் இப்படத்தில் ஆறு சாமி மற்றும் அவரது மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். பெருமாள் பிச்சை மகனுக்கும், ஆறு சாமி விக்ரம் மகனுக்கும் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தை ஹரி உருவாக்கி வருகிறார். மேலும் அப்பா விக்ரம் ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் இன்னமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமின் சாமி 2 வில் ஆறுச்சாமி இல்லை ?
Published on 29/03/2018 | Edited on 31/03/2018
சார்ந்த செய்திகள்
Next Story
சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ பாடல் !
Next Story
தமிழக காவல்துறைக்காக விக்ரம் நடித்த குறும்படம்!
Published on 17/09/2018 | Edited on 18/09/2018
'சாமி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2ஆம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் விக்ரம் தற்போது ராஜேஷ் எம் செல்வா இயக்கும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது ஒரு விளம்பர படத்திலும் நடித்துவுள்ளார். சி.சி.டிவி கேமராவின் விழிப்புணர்வு சம்மந்தமாக தயாரான இந்த விளம்பர படத்திற்கு 'மூன்றாம் கண்' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே ஜே.டி & ஜெர்ரி இயக்கத்தில் உருவான உல்லாசம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.