Skip to main content

ஒரு போராளியை போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்தேன்! - நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Published on 02/05/2018 | Edited on 03/05/2018
sac


சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குநராக இருந்த புதுமுக இயக்குனர் விக்கி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சர்ச்சை கதையை படமாக எடுப்பதால் ஏற்படும் மிரட்டல் பற்றி பேசியபோது, "இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னை பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்க போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல், 'எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம்' என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்து படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் "ஒன் மேன் ஆர்மி" என்கிற வாழ்க்கை கதை. அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

 

sac

 

கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன். நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டு செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன்.
 

நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள். எனக்கு ஜோடியாக ரோகிணி  இணைந்தார். கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான்  எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர். இப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும். சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது, மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் படம் 'சட்டம் ஒரு இருட்டறை ' படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்" என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞரை நினைத்த நேரத்தில் சந்தித்தேன்; ஸ்டாலினுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறேன் - ‘கலைஞரும் நானும்’ எஸ்ஏசி நெகிழ்ச்சி!

Published on 07/10/2021 | Edited on 08/10/2021

 

ீ

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர், புரட்சி கரு்துக்களை தன்னுடைய திரைப்படம் வாயிலாக தெரிவித்தவர், நடிகர் விஜய்யின் தந்தை என்ற பன்முக அடையாளத்தைக் கொண்டிருப்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞருடன் இருந்து பல படங்களில் பணியாற்றியவர். கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் அரசின் எதிர்ப்பை சம்பாதித்தவர். அதிமுக ஆட்சியில் ‘தலைவா’ படத்துக்கு விஜய் சந்தித்த எதிர்ப்பை, 40 ஆண்டுகளுக்கு முன்பே தன் படத்திற்கு எம்ஜிஆரிடம் இருந்து அந்த எதிர்ப்பை பார்த்தவர். இந்த நிலையில், கலைஞருக்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவரிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு,

 

எம்ஜிஆர் இருந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர் கலைஞருடன் மிக நெருக்கமாக இருந்தீர்கள். தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி தலைமையுடன் அதே தொடர்பில் இருக்கிறீர்களா? 

 

கலைஞருடன் எனக்கு இருந்த நட்பு என்பது சினிமாவையும் தாண்டியது. வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றாக எனக்கு மூன்று படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். எங்கள் உறவு என்பது அரசியலையும் தாண்டியது. இத்தனை படங்களில் பணியாற்றினாலும் அவர் என்னிடம் ஒருமுறை கூட அரசியல் தொடர்பாக பேசியதில்லை. கலைஞரிடம் இருக்கும் மிக முக்கிய சிறப்பம்சம் என்றால், அவர் நட்புக்கு தருகின்ற முக்கியத்துவம். அவருடைய கடைசி காலம் வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடப்பு பாராட்டினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தார். அந்த வகையில் கலைஞருக்கு நிகரான ஒருவர் அரசியலில் இல்லை என்றே கூறலாம். 

 

எப்போது அவரை பார்க்க வேண்டும் என்றாலும் முன் அனுமதி பெறாமல் செல்லாம். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வாரத்திற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், அவர்கள் சொல்கிற நேரத்துக்குச் சென்று, அவர்கள் அழைக்கும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றும் நேர் மாறான தன்மையுடைவர் கலைஞர். திடீர் என்று கலைஞரை பார்க்க வேண்டும் என்றால், சண்முகநாதனுக்கு ஒரு ஃபோன் போட்டு, கலைஞரை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவர், “என்னய்யா திடீர்னு இப்படி சொல்ற, நிறைய அப்பாயிண்மெண்ட் தலைவருக்கு இருக்கே” என்பார். நான், “அண்ணே வீட்டுக்கு வரேன், கலைஞரை முடிந்தால் பார்க்கிறேன், இல்லை என்றால் போகிறேன்” என்று சொல்வேன். கலைஞர் வீட்டிற்குச் சென்ற உடன் அவர், கலைஞரிடம் போய் சொல்வார். மிக சில நிமிடத்திலேயே அவர் என்னை அழைப்பார். என்ன உதவி என்றால் அந்த ஸ்பாட்டிலேயே செய்வார். 

 

அந்த விதத்தில் அவரை யாரும் ஓவர்டேக் செய்ய முடியாது. மிக அன்பாக நண்பர்களைப் பார்த்துக்கொள்வார். அந்த வகையில் என் வயதுக்கு கலைஞருடன் பேசுவது என்பது மிக எளிதாக இருந்தது. தற்போது ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை. 


அரசியல் தலைவருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள், உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? தீவிர அரசியலுக்கு வருவீர்களா, வாய்ப்பிருக்கிறதா? 

 

இந்த வயதில் நான் ஏன் இனி அரசியலுக்கு வரப் போகிறேன். அந்த மாதிரியான அரசியல் ஆசை தற்போது வரை இல்லை. நீங்கள் கூறியது போல் எம்ஜிஆரை எதிர்த்தே கலைஞருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தேன். ஒருமுறை கலைஞரை எம்ஜிஆர் ஆட்சியில் கைது செய்தபோது, அதைக் கண்டித்து 'நீதிக்கு தண்டனை' என்ற பெயரில் கலைஞர் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்று ஒருபக்க அளவில் செய்தித்தாளில் விளம்பரம் அளித்தேன். அப்போதே நான் யாருக்கும் பயப்படவில்லை. அந்த நேரத்தில் நான் இயக்கியிருந்த ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளியாகியிருந்தது. படம் நல்ல முறையில் போனதை அடுத்து, நான் காஷ்மீருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றேன். திடீரென காஷ்மீர் போகிற வழியில் டெல்லியில் தங்கிருந்தபோது சண்முகநாதனிடம் இருந்து ஃபோன் வருகிறது. “எங்கயா இருக்க,” என்றார். நான் “டெல்லியில் இருக்கேன்” என்றேன். “இங்கே பத்தி எரியுது, டெல்லியில இருக்கியா! கலைஞர் பார்க்கனும்னு சொல்றார், உடனே வா” என்றார். நான் வருவதற்குள் என் படத்தை தடை செய்ய மாநில அரசு முயன்றதும், அதற்குள் கலைஞர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததும் எனக்குத் தெரிந்தது. எனவே அப்போதே எல்லா அரசியலையும் நான் பார்த்திருக்கிறேன். 

 

 

Next Story

"தம்பிகளுக்கு வழிவிடுங்கள் என்று நான் எதற்காக பேசினேன்.."? - சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சி!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

k

 

சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் கமலின் 60ம் ஆண்டு திரைவிழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர், " முதலில் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துவிடுங்கள், பிறகு தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" என்று கூறியிருந்தார். அவரின் அந்த பேச்சு அடுத்த சில வாரங்களுக்குத் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானது. இந்நிலையில் இதுதொடர்பாக அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய இந்த கேள்விக்கு அவரின் எதார்த்தமான பதில் வருமாறு, " நான் அந்த விழாவில் அப்படி பேசியது உண்மைதான். ஆனால் எதற்காக பேசினேன் என்று பார்க்க வேண்டும். காமராஜருக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் சினிமாவை பின்புலமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் அது எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் தான் அப்படிக் கூறினேன்.

 

ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதை விஜய்யை மனதில் வைத்துக் கூறினேனா என்று கேட்கிறீர்கள், அப்படி இல்லை, அனைத்து ஜூனியர் தம்பிகளும் களத்திற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் நான் சினிமாக்காரன். எதார்த்தமாக யோசிக்கக்கூடியவன். அந்த வகையில் ரஜினியும், கமலும் வந்தால் அவர்கள் வழியில் அடுத்து அவர்கள் தம்பிகளும் அதே வழியில் பயணிப்பார்களே என்ற ஆசையில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விமர்சனம் செய்பவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மனதில் தோன்றியதைக் கூறினேன், அவ்வளவுதான். இடைவெளி விழுந்தாலும் சினிமா நண்பர்கள் அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன்" என்றார்.