gddsbs

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிவரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் சமீபத்தில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி, 'ஆர்.ஆர்.ஆர்' படம் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மிகுந்தஉற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் தமிழ்நாடுதியேட்டர் வெளியீட்டு உரிமையைபிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைகா' கைப்பற்றியுள்ளதாகச் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் இதர உரிமைகளுக்கும் தற்போது கடும் போட்டி நிலவிவரும் நிலையில், இந்தப் படத்தின் ஹிந்தி மொழி தொலைக்காட்சி மற்றும் மற்ற மொழி டிஜிட்டல் உரிமத்தை சுமார் 325 கோடி ரூபாய்க்கு ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இதன் மற்ற தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஒரு இந்தியப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் இந்த அளவுக்கு விலைபோனது இதுவே முதல்முறை எனக் கூறப்பட்ட நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தற்போது சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு பதிவிட்டுள்ளனர்.

Advertisment