Skip to main content

ஏன் அமைதியாவே இருக்கீங்க- பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர் ஆதங்கம்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'Mr.லோக்கல்'. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசயமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற மே 17ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது.
 

robo shankar

 

 

இந்நிலையில் இன்று இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரோபோ ஷங்கர் படத்தை பற்றியும் படக்குழுவை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இறுதியாக பேசி முடிக்கும்போது, எனக்கு ஒரு சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. ஏன் பத்திரிகையாளர்களுக்கு படக்குழு அழைப்பு விடுத்து படத்தை போட்டுக்காட்டினால் ஏன் அமைதியாகவே இருக்கிறீர்கள். ஏன் அமைதியாகவே இருக்கிறீர்கள். குடும்பத்துடன் சென்றால் இப்படிதான் பார்ப்பீர்களா? என்று கேட்டார் ரோபோ ஷங்கர்.
 

இதனையடுத்து நான் பார்த்த வரையில் பத்திரிகையாளர்கள் வேலைணு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்குதான் கைதட்டி ரசித்து பார்த்தீர்கள். அதன்பின்னர் நான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பார்க்கும்போது அமைதியாகவேதான் இருக்கிறீர்கள் என்று முதலில் வாக்குவாதம் செய்வதுபோல கேள்வி கேட்க, அதற்கு அங்கிருந்த பத்திரிகையாளர்கள்,  “ நாங்கள் சரியாக உங்களை பற்றி எழுதியதால்தான் நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள். இது ஆடியோ லாஞ்ச் இல்லை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு. இங்கு நாங்கள் படத்தை கவனித்து எழுதவும், படக்குழு பேசுவதையும்தான் கவனித்து எழுத வந்திருக்கிறோம்”என்றனர். சிறிது நேரம் அவ்விடத்தில் குழப்பமாகவே இருந்தது. பின்னர், கடைசியாக ரோபோ ஷங்கர் நார்மலாக பேசி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்து குழப்பத்தை தீர்த்துவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கலில் ரோபோ சங்கர்! களைகட்டிய கோவில் திருவிழா

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Robot Shankar in Dindigul!  temple festival

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். அது போல் இந்த வருடம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த திருவிழாவின்போது வருடந்தோறும் தரணி குழும நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழில் அதிபர் ரத்தனம் சார்பில் கோட்டை மாரியம்மன் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திலும் கலையரங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கி இரவு கலைநிகழ்ச்சி நடத்துவதும் வழக்கம். அதுபோல் இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமாக ஏழாயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த அன்னதானத்தை தொழில் அதிபர் ரத்தனம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ரத்தனத்தின் மகன்களான ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் திண்டுக்கல் மாநகர 17ஆவது வார்டு கவுன்சிலரும், வக்கீலுமான வெங்கடேஷ் ஆகியோர் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கினர். அதைத் தொடர்ந்து இரவு நடிகர் ரோபோ சங்கர், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேவகோட்டை அபிராமி, நடிகர் புகழ் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

Next Story

‘உனக்காக வாழ நெனைக்கிறேன்…' - இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024

 

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் தமிழில் பிகில், விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளார். ரோபோ ஷங்கரின் உறவினரான கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தம்பதிகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நக்கீரன் ஆசிரியரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.