Skip to main content

"கரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்...யோசிக்காமல் உதவி செய்தார்!" - ரோபோ ஷங்கர் 

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

vdvds


தமிழில் தற்போது முன்னணி காமெடியன்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரோபோ ஷங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷ் இக்கட்டான நேரத்தில் தனக்கு செய்த உதவி குறித்து பேசியபோது...

 

vdsvsd

 

"கரோனா காலகட்டத்தில் ஒரு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு ஃபோன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்கு குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியை செய்தார் அவர். தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார். என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கலில் ரோபோ சங்கர்! களைகட்டிய கோவில் திருவிழா

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Robot Shankar in Dindigul!  temple festival

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். அது போல் இந்த வருடம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த திருவிழாவின்போது வருடந்தோறும் தரணி குழும நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழில் அதிபர் ரத்தனம் சார்பில் கோட்டை மாரியம்மன் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திலும் கலையரங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கி இரவு கலைநிகழ்ச்சி நடத்துவதும் வழக்கம். அதுபோல் இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமாக ஏழாயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Robot Shankar in Dindigul!  temple festival

இந்த அன்னதானத்தை தொழில் அதிபர் ரத்தனம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ரத்தனத்தின் மகன்களான ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் திண்டுக்கல் மாநகர 17ஆவது வார்டு கவுன்சிலரும், வக்கீலுமான வெங்கடேஷ் ஆகியோர் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கினர். அதைத் தொடர்ந்து இரவு நடிகர் ரோபோ சங்கர், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேவகோட்டை அபிராமி, நடிகர் புகழ் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

Next Story

‘உனக்காக வாழ நெனைக்கிறேன்…' - இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024

 

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் தமிழில் பிகில், விருமன் மற்றும் தெலுங்கில் பாகல் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளார். ரோபோ ஷங்கரின் உறவினரான கார்த்திக் மதுரையில் ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் தம்பதிகளின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதில் நக்கீரன் ஆசிரியரும் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.