Skip to main content

எஸ்.ஜே சூர்யா பட நாயகியின் தந்தையிடம் கத்திமுனையில் வழிப்பறி!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

hryh


எஸ்.ஜே சூர்யாவின் 'அன்பே ஆருயிரே', 'இசை' மற்றும் 'மருதமலை', 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா சோப்ரா தந்தை நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சிலர் வந்து அவரை மிரட்டித் திருடியதாக மீரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"என் தந்தை போலீஸ் காலனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஸ்கூட்டரில் வந்த இருவர் கத்தியைக் காட்டி அவரை மிரட்டி அவரது மொபைலைப் பறித்துக் கொண்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை" என்று டெல்லி காவல்துறை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு உடனடியாக டெல்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்து மீண்டும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "உடனடி நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி காவல்துறைக்கு நன்றி. நம் காவல்துறையால் பாதுகாக்கப்படும் போது பெருமையாக இருக்கிறது. எது திருடு போனது என்பது முக்கியமல்ல. நமது வீட்டுப் பெரியவர்களைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியம். டெல்லி காவல்துறைக்கு என் வணக்கங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மீராவின் இந்தப் பதிவுகளுக்குப் பல்வேறு தரப்பிலுருந்து ஆதரவும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Next Story

“கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்” - எஸ்.ஜே சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj surya suffering from viral fever

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். தன்னை ஒரு பட நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில் அதற்கு வரமுடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்த பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ், வேதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாத சத்யநாராயணா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளும்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதில் கலந்துகொள்ளாத சூழலில் இருப்பதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் தம்பி பாபி சிம்ஹா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் தம்பி. மேலும் படத்தின் வெற்றி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே சூர்யாவின் உடல் நலம் தேறி வருமாறு கமெண்ட் செய்த நிலையில், அது தொடர்பாக பதிவிட்ட எஸ்.ஜே சூர்யா, “4வது நாளாக முன்னேறி வருகிறோம். அன்பிற்காக எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.