Skip to main content

"அந்த உயிரிழப்பு காரணமாக தனது ஸ்டூடியோவையே ஏ.ஆர்.ரஹ்மான் மூடிவிட்டார்" - ஆர்.கே.செல்வமணி

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

rk selvamani about accident in shooting spot and request to government

 

படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்து ஊழியர்கள் உயிர்பலியாவது அவ்வப்போது நடந்தேறி வருகிறது. இறந்தவர்களுக்கு கதாநாயகர்கள் சார்பில் இழப்பீடு கொடுக்கப்பட்டாலும் அவர்களின் மறைவு அப்படக்குழுவையும் சினிமா துறையையும் சற்று பாதிக்கிறது. சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கயிறு அறுந்து இறந்தார். தொடர்ந்து ஐயர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். 

 

இப்படி தொடர் விபத்து நடந்து வரும் நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், "படப்பிடிப்பு தளத்தில் உயிரிழக்கும் சம்பவம் மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு சாதாரண செய்தியாக அமைந்து விடுகிறது. ஆனால் அதன் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்ய எந்த ஒரு வகையிலும் வழி இல்லாமல் போய்விடுகிறது. ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் உயிர் சேதம் ஏற்பட்டால் அவர்கள் உதவி செய்துவிடுகிறார்கள். ஆனால் சிறிய படங்களில் இறந்து போகிறவர்களுக்கு அவர்கள் உடலை கூட பணம் கொடுத்து எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த தயாரிப்பாளர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. 

 

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிற இடத்தில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டால், எப்படி மத்திய மாநில அரசுகள் உதவி செய்கிறதோ, அதுபோன்று திரைப்படங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும். பணியின்போது இறப்பவர்கள் அல்லது காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் அந்த குடும்பத்துக்காக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறோம். திரைப்படத்துறையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்‌. வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில்‌ திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள்‌ வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களை பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌" என்றார்.

 

மேலும், "ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட் மேன் இறந்த சம்பவம் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிதும் பாதித்துள்ளது. அதன் காரணமாக அந்த ஸ்டூடியோவையே அவர் இழுத்து மூடிவிட்டார். பின்பு அவர் எங்களை தொடர்பு கொண்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் படப்பிடிப்பு தளத்தில் மரணம் அடைந்தால் அவர்களை காப்பாற்ற நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர்களுக்கு உதவி செய்யம் நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி வருகிற மார்ச் 19ஆம் தேதி நடத்த முடிவெடுத்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில் திரட்டப்படுகின்ற நிதி, அதன் மூலம் வருகிற நன்கொடை அனைத்தும் பாதிக்கப்படுவோரின் குடும்பத்திற்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும். இது சிறிய பட்ஜெட் படங்கள் உட்பட அனைத்து படங்களில் பணிபுரிவோருக்கும் பொருந்தும்" எனப் பேசினார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.