Skip to main content

''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' -  ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு 

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

ஜியோ சாவன் இணையதளம் இந்தியாவில் இணைய ஆடியோ நிகழ்ச்சி சேவையை கடந்த 2016 ஏப்ரல் முதல் வழங்கி வருகிறது. கதைசொல்லிககள், சுயாதீன தாயாரிப்பாளர்கள், தன்முனைப்பு கலைஞர்களுடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. காமெடி முதல் பாப் கலாச்சாரம் வரை, விளையாட்டு, அரசியல், சினிமா என பலவகையிலான 100க்குமேற்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு அளித்து, பலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் முன்னனி நிறுவனமாக வளர்ந்து வரும் ஜியோ சாவன் இணையதளம் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்யேகமாக ஆர்.ஜெ.பாலாஜி தொகுத்து வழங்கும் 'மைண்ட் வாய்ஸ்' எனும் நிகழச்சியை தொடங்கியுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

 

rj balaji

 

இதில் ஜியோ சாவன் நிறுவன உலக சந்தையின் விநியோக துணை அதிகாரி ஆதித்யா காஷ்யப் பேசியபோது... ''முதலில் பாட்காஸ்ட் என்றால் என்னவென்று சொல்லிடுறேன். இது இணையத்தில் இருக்கும் ஆடியோ ஷோ எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இந்த நிகழ்ச்சி புதுமையானதாக இருக்கும். எங்க தரப்பில் இருந்து யோசித்த போது  இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்.ஜெ.பாலாஜியை தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்தோம். எந்த சமூக விஷயத்துக்கும் முன்னுக்கு வந்து நிற்பவர் அவர் . அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி. தமிழ் மொழியில் ரசிகர்களை ஈர்ப்பதில் இந்த நிகழ்ச்சி பெரிதளவில் உதவும்'' என்றார்.

 

 

மேலும் இதில் ஆர்.ஜெ.பாலாஜி பேசியபோது... ''முதலில் பாட்காஸ்ட் என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை. பிறகு தான் அதைப்பற்றி தெரிந்தது. இது ஒரு ரேடியோ ஷோ இணையத்தில் இருக்கும் ரேடியோ. நான் ஏன் இதில் இருக்கிறேனென்றால், இது இப்போது முடிவு பண்ணியதில்லை. வெகுகாலம் முன்பே முடிவு செய்தது. ஜியோ சாவன் உலகம் முழுவதும் இயங்குற நிறுவனம். இதுவரை 100க்கும் மேற்பட்ட ஐடியாக்களை பிடித்து கடைசியில் இந்த நிகழ்ச்சியை செய்யலாமென முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சி இன்றைய சூழ்நிலையில் அவசியம் என தோன்றுகிறது. இன்றைய இளைஞர்கள் எல்லா விஷயங்கள் மீதும் கோபப்படுவதை கடமையாக வைத்திருக்கின்றனர். கோபப்படுவது மட்டுமே சமூகத்துக்கு செய்கின்ற முக்கிய மாற்றமாக எல்லோரும் நினைக்கின்ற காலமாக இது இருக்கின்றது. இது மாற வேண்டும். முக்கியமான விஷயங்களை மறைத்து, தேவையில்லாத விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்தி நம்மை பதட்டப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். இதை மாற்றக்கூடிய நிகழ்ச்சியாக, பேச மறுக்கின்ற, மறக்கக்கூடிய விசயங்களை பேசுகின்ற நிகழ்ச்சியாக இது இருக்கும். இதில் சமூகத்தின் காரசார விஷயங்கள் மட்டுமில்லாமல் விளையாட்டு, சினிமா என எல்லாவற்றையும் பற்றி பேசுகின்ற  நிகழ்ச்சியாக இருக்கும். இது எனக்கு புதியதாக இருக்கின்ற, அதே நேரம் சமூகத்துக்கு சொல்ல வேண்டிய கடமையாவும் இந்த நிகழ்ச்சி இருக்கும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நம்பிக்கைத் தரும் படம்” - ஆர்.ஜே பாலாஜி

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
rj balaji speech in singapore saloon success meet

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் ஆர்.ஜே பாலாஜி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.    

அப்போது ஆர்ஜே பாலாஜி பேசுகையில், “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

சவுத் இந்தியன் அமீர்கான் என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

Next Story

“டேட்ஸ் கூடுதலாக கேட்பேன், சம்பளம் பேரம் பேசுவேன்” - ஆர்.ஜே. பாலாஜி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
rj balaji about singapore saloon  movie and his vinema experience

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி,  மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க... ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு...’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.