Skip to main content

கனவில் நயன்தாரா வரவில்லை, இவர்கள்தான் வந்தார்கள் - ஆர்.ஜே. பாலாஜி இன்டெர்வியூ... பாகம்-1

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

rjb

 

'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி அன்று 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, நமக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி வருமாறு:-

 

இதற்கு முன்பு அரசியல் படம், இப்போது அம்மன் படம். அம்மன் படம் எடுக்கக் காரணம்? 


ஜாலியாக, ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் எடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஏன் அம்மன் படமென்றால், அம்மன் படம் வந்து இருபது வருடம் ஆகிவிட்டது. முன்பெல்லாம், அம்மன் படத்தை குடும்பத்தோடு பார்ப்பார்கள். இப்போது பேய்ப்படத்தைக் குடும்பத்தோடு பார்க்கிறார்கள். மீண்டும் குடும்பத்தோடு பார்க்கும்  அம்மன் படம் எடுக்கலாமென்பதுதான் இப்படத்தை எடுக்கக் காரணம்.

 

ட்ரைலரில் மதத்தை வைத்து ஓட்டு வாங்கமுடியாது. ஆனால் இன்னும் ஐந்து வருடத்தில் வாங்கிக் காட்டுகிறேன் பார் என வசனம் வருகிறது. அது போன்ற சூழல், தமிழ்நாட்டிற்கோ அல்லது இந்தியாவிற்கோ வருமா?. போன படத்தில் பேசிய அரசியலுக்கும் இந்தப் படத்தில் பேசப்போகிற அரசியலுக்கும் என்ன வித்தியாசம்? 

 

போன படம் ஒரு அரசியல் படம். இது ஒரு குடும்பப் படம். ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையில், செய்திகளில் பார்க்கிற, நக்கீரனில் படிக்கிற விஷயங்களிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம். மற்றபடி இது அரசியல் பேசுகிற படமல்ல. போன படம் நடப்பதைக் காட்டிய படம். இந்தப்படம் ஒரு குடும்பத்திற்கு, கடவுள் மீதான நம்பிக்கை எப்படி இருந்தது. அது எப்படி மாறியது என்பதைச் சொல்லும் படம். நான் காவியமெல்லாம் எடுக்கவில்லை. தியேட்டருக்கு வந்தால் சந்தோசமாகப் பார்க்கும் ஒரு படமாக இருக்கும்.


நயன்தாரா என கூகுளில் தேடினாலே, அவர் அம்மன் கெட்டப்பில் இருக்கும் படங்கள்தான் வருகின்றது. அந்த வேடத்திற்கு நயன்தாரா பொருந்துவார் என நினைத்தீர்களா? நயன்தாரா மூக்குத்தி அம்மனாக வாழ்ந்திருக்கிறார் எனக் கூறினீர்கள். என்றாவது கனவில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகக் காட்சியளித்துள்ளாரா?  

 

cnc

 

நயன்தாரா எனத் தேடினால் அம்மன் படங்களாக வருகிறதென்றால், நிறைய பேருக்கு அது பிடிக்கிறது என்றுதானே அர்த்தம். ஒன்று வருவதற்கு முன்பு அது எப்படி இருக்குமென யாருக்கும் தெரியாது. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சேவாக்கை கேப்டனாக போடலாமென்று நினைத்தார்கள். ஆனால் மறைந்த கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மட்டும், தோனியைக் கேப்டனாக போடலாம் என்றார். இன்று தோனியை எப்படிப் பார்க்கிறோம்? 

 

அதுபோல்தான் படம் ஆரம்பிக்கும்போது கே.ஆர்.விஜயா அம்மா நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன்  நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு  எப்படி செட் ஆகும் என நினைத்தார்கள். ஆனால், இப்போது அம்மன் என்றாலே நயன்தாராதான் நியாபகம் வருகிறார் என்கிறார்கள். இப்போதுள்ள தலைமுறை நயன்தாராவை அம்மனாக ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்போது கனவெல்லாம் வருவதில்லை. கண்ணை மூடினால் படத்தின் எடிட்டர் முகமும், இன்னொரு இயக்குனரான சரவணன் முகமும் தான் வருகிறது.

 

ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் இருந்து அரசியல் பேசுவதற்கும், எளிய மக்களின் பார்வையிலிருந்து அரசியல் பேசுவதற்கும் என்ன மாதிரியான சிரமங்கள் இருந்தது?      

     

எல்.கே.ஜி  படத்தில் நான் ஒரு ஊழல் கவுன்சிலர். எல்லாவற்றையும் நானே பேசியிருப்பேன். இறுதியில் திருந்துவது போல் காட்சி இருக்கும். ஆனால் இது ஒருவனைப் பற்றிய படம் கிடையாது. அம்மா, தங்கை கதாபாத்திரங்கள், பின்பு எனது காதபாத்திரம் மற்றும் தாத்தா கதாபாத்திரம் என அனைவரது உணர்ச்சிகள் தான் இப்படம். நான் ஒருவன் மட்டும் பேசும் படமாக இது இல்லை.

 

எல்.ஆர். ஈஸ்வரி அம்மா படத்தில் பாடியிருக்கிறார். அவருடைய ஸ்பிரிட் எப்படி இருந்தது?

 

nkn

 

எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா இல்லாமல், அம்மன் படம் எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் பாடுவது மட்டுமில்லாமல் நடிக்கவேண்டும் எனக் கேட்டேன். 60 வருடத்தில், அவர்கள் படத்தில் நடித்ததில்லை. நான் கேட்டவுடன் சரியென்றுவிட்டார்கள். இந்த வயதில் நாகர்கோவில் வரை வந்து நான்கு, ஐந்து மணி நேரம் இருந்து நடித்துத் தந்தார். ஏ.ஆர். ரஹ்மான் சார், அதைப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டதாக ட்விட் செய்துள்ளார். அவர் மட்டுமல்ல எங்களுக்கும் ஆச்சர்யம்தான். இந்த வயதில் அப்படி ஒரு எனர்ஜி. அவர் இருக்குமிடம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நம்பிக்கைத் தரும் படம்” - ஆர்.ஜே பாலாஜி

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
rj balaji speech in singapore saloon success meet

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் ஆர்.ஜே பாலாஜி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.    

அப்போது ஆர்ஜே பாலாஜி பேசுகையில், “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

சவுத் இந்தியன் அமீர்கான் என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

Next Story

“டேட்ஸ் கூடுதலாக கேட்பேன், சம்பளம் பேரம் பேசுவேன்” - ஆர்.ஜே. பாலாஜி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
rj balaji about singapore saloon  movie and his vinema experience

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி,  மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க... ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு...’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.