Skip to main content

மாணவர்கள் இதை எப்படிக் கையாள்வார்கள்?- ஆர்.ஜே. பாலாஜி கேள்வி!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

rj balaji


கரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படாமல் உள்ளன. ஆனால், தற்போது சில பள்ளிகளும், கல்லூரிகளும் மாணவர்களை வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் முறையில் வகுப்பு எடுக்க திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 


அதில், "நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் நமக்குக் கடுமையான மன உளைச்சலை அளிக்கிறது. அதிலும், கடந்த சில வாரங்களாக சின்னக் குழந்தைகளுக்கு ஆன்லைன் க்ளாஸ் என்ற பெயரில் அய்யயோ... பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எல்லாம் 7.30 மணியிலிருந்து 2.30 மணி, 8.30யிலிருந்து 3.30 மணி என்று 8-9 மணி நேரம் குழந்தைகளுக்கு வகுப்பு வைக்கும்போது அந்த மன உளைச்சலை அவர்களால் எப்படிக் கையாள முடியும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிப்பு, கழுத்து, கண் எப்படிப் பாதிக்கப்படும் என்று யோசனை செய்துகொள்ளுங்கள். இத்தனை நாட்கள் அப்பா - அம்மா போன் பார்க்காதே... டிவி பார்க்காதே என்று சொன்னவர்கள், இப்போது போன் பாரு, டிவியைப் பார் என்கிறார்கள். பெரியவர்களால் கூட 8 மணி நேரம் கம்ப்யூட்டரை தொடர்ச்சியாகப் பார்த்தால், வேலை செய்தால் பிரச்சனை வரும் என்று மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் சொல்லும்போது சின்னக் குழந்தைகள், கல்லூரி படிக்கும் மாணவர்கள் இதை எப்படிக் கையாள்வார்கள்?

புரிகிறது. மாணவர்களுக்கு எதாவது செய்தால் மட்டுமே பள்ளிக் கட்டணம் கேட்க முடியும். என்ன செய்தீர்கள் என்று பணம் கட்டும் பெற்றோர் கேட்பார்கள். ஆகையால், வகுப்புகளை ஆரம்பித்துவிட்டார்கள். பாடத்தை முடிக்க வேண்டும், வருடம் போகிறதே என்று நினைப்பது புரிகிறது. நியாயமாகவும் இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக அதற்கான தீர்வு இதுவா?
 

 


காலம் காலமாக ஒரு நாளைக்கு 8 பாடங்கள் / பாடவேளைகள் என்று பின்பற்றிவிட்டு, மாணவர்கள் பள்ளியில் பழகிய விஷயத்தை இப்போது அப்படியே ஆன்லைன் வகுப்புகளுக்கும் அதே முறையைக் கொண்டு வருவது சரியானதா என்று பேசித் தீர்வு காணுங்கள். ஆசிரியர்களுக்கும் எவ்வளவு பெரிய மன உளைச்சல்?

மற்ற மாநிலங்களில் மற்ற பள்ளிகளில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதைப் பதிவு செய்து அதை அப்லோட் செய்கிறார்கள். குழந்தைகள் விருப்பப்படும் நேரத்தில் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்துவிட்டு, இந்தத் தருணத்திற்குள் அதை முடித்தால் போதும் என்று சொன்னால் செய்துவிடப் போகிறார்கள்.

வாரத்திற்கு ஒரு பாடம் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பாடம் இரண்டு மணி நேரங்கள் மட்டும் என எவ்வளவோ மாற்று வழிகளை யோசிக்கலாம். ஏனென்றால் 8 மணி நேரம் ஒரு குழந்தை கம்ப்யூட்டரை, மொபைல் திரையைப் பார்ப்பதில் கஷ்டங்கள் இருக்கின்றன. மின்சாரக் கட்டணம் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
 

http://onelink.to/nknapp


எல்லோர் வீடுகளிலும் ஒரு குழந்தை ஒரு கம்ப்யூட்டர், அவர்களுக்கான அறையில் உட்கார்ந்து கொண்டு கவனிக்கலாம் எனும் அளவு வசதி இருப்பதில்லை. 3 குழந்தைகள் உள்ள வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர்தான் இருக்கும், ஒரு மொபைல்தான் இருக்கும். அப்படியிருக்கும்போது 3 குழந்தைகள் எப்படி வகுப்புகளைக் கவனிக்க முடியும்.

ஆகையால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள், மன உளைச்சல்கள் இருக்கின்றன. எனவே, அன்பார்ந்த பள்ளி, கல்லூரிகளே இந்த இணைய வகுப்பை எப்படி நடத்தலாம் என்பதை மீண்டும் யோசியுங்கள். இதை ஒரு சாதாரண பெற்றோராகக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நம்பிக்கைத் தரும் படம்” - ஆர்.ஜே பாலாஜி

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
rj balaji speech in singapore saloon success meet

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் ஆர்.ஜே பாலாஜி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.    

அப்போது ஆர்ஜே பாலாஜி பேசுகையில், “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

சவுத் இந்தியன் அமீர்கான் என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

Next Story

“டேட்ஸ் கூடுதலாக கேட்பேன், சம்பளம் பேரம் பேசுவேன்” - ஆர்.ஜே. பாலாஜி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
rj balaji about singapore saloon  movie and his vinema experience

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி,  மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க... ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு...’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.