Advertisment

"எந்த நடிகர்களும் அப்படி செய்ய முடியாது" - நடிகை ரித்விகா 

hfhdfjfj

Advertisment

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ரித்விகா, ரீயா, பானுப்ரியா, கே.எஸ் ரவிக்குமார், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுத்தில் உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவலின் தலைப்பை இப்படத்திற்கும் படக்குழு வைத்துள்ளது. தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா தன்னுடைய கனவு கதாபாத்திரம் குறித்து நமக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியபோது....

"எந்த நடிகர்களும்அப்படி செய்ய முடியாது. பழம்பெரும் நடிகர்களை கேட்டால் கூட, நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்கலாம் என இப்போதும் ஏக்கத்தோடு சொல்லுவார்கள். அன்று நான் அந்த கதாபாத்திரத்தை செய்திருக்க வேண்டும், தேதி இல்லை, அந்த நடிகரோடு நடித்திருக்க வேண்டும் என பல்வேறு காரணங்களால் அவர்களால் நினைத்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். இது எப்போதும் முழுமை அடையாது. எனக்கும் அப்படியே" என கூறியுள்ளார்.

rithvika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe