Skip to main content

#Exclusive கோமாளி படத்தில் ரஜினி கிண்டல் காட்சி வைத்தது ஏன்..? - ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் விளக்கம்  

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் இணைந்து நடித்த கோமாளி படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் காட்சியில் ரஜினியை கிண்டல் செய்த காட்சி ஒன்று இடம்பெற்றது. அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வலுக்கவே அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கியது படக்குழு. இதையடுத்து காட்சி நீக்கப்பட்டு அந்த படம் வெளியானது. 

 

richard

 

 

இந்நிலையில் இந்த காட்சி வைத்தது குறித்த காரணத்தை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விளக்கமளித்து பேசியபோது....''கோமாளி படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி வைத்தபோதே எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காட்சியை வைக்கலாமா வேண்டாமா என்று. நானும், ஜெயம் ரவியும் கூட இந்த காட்சியால் எந்த பிரச்சனையும் வந்துவிடாதே என்று கேட்டோம். அதற்கு இயக்குனர், இது நாம் வெறும் காமெடிக்காகத்தானே வைக்கிறோம் ஒரு பிரச்சனையும் வராது என்று சமாதானப்படுத்தினார். ஆனால் நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக. அதனால் அந்த சீனை நாங்கள் தூக்கிவிட்டோம்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பானி இல்லத் திருமண விழா; மெய்சிலிர்த்த ரஜினி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
rajinikanth about ambani family pre wedding

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.