Skip to main content

"எப்போதுமே அட்வைஸ் கொடுத்துட்டு இருப்பான். அதனால் தாத்தான்னு பேரு வெச்சுட்டேன்" - ரெஜினா 

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

regina speech at Michael movie Press Meet

 

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரித்துள்ள புதிய படம்  'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது படக்குழு. இதில் நடிகை ரெஜினா, சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

நடிகை ரெஜினா பேசுகையில், "எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. படத்தில் மட்டும் அல்ல அவருடைய தனிப்பட்ட கதாபாத்திரமும் அப்படி தான்.  ஒன்னு வேணும்னு நினைச்சான்னா... அத பண்ணிட்டே இருப்பான். சினிமாவில் இந்தளவுக்கு சந்தீப் வளர்ந்திருக்கான்னு நினைக்கும் போது ஒரு நண்பனாக பெருமைப் படுகிறேன். அவரது நிக் நேம் தாத்தா. ஏனென்றால் எப்போதுமே அட்வைஸ் கொடுத்துட்டே இருப்பான். அதனால் தாத்தான்னு பேரு வெச்சுட்டேன். இப்பவும் அப்படி தான் சந்தீப்பை கூப்பிடுவேன். இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன்" என்றார். 

 

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில், "எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர்  தயாரிப்பாளர்கள் தான். விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.  கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது.  அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

14 வருடங்கள் நிறைவு செய்தது குறித்து சந்தீப் கிஷன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
sundeep kishen about his complete 14 years in cinema

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்', கசடதபற ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். தனுஷிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிரது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பகிர்ந்துள்ளார். 

இது தொடர்பாக அவரின் எக்ஸ் தள பதிவில், “இந்த 14 வருடங்களாக நண்பர்களாக, குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம், நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்நாளில் கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கேங்கில் இணைந்த 2 நடிகர்கள் - ராயனாக தனுஷ்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
dhanush 50 first look update title as raayan

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதைத் தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மூன்று பேரும் இடம்பெற்றிருக்கின்றனர். மூன்று பேரும் கையில் ஆயுதங்களோடு கோபமாக நின்றுகொண்டிருக்கின்றனர். 

மேலும் ரத்தக் கறையோடு காணப்படுகின்றனர். இப்படத்திற்கு ‘ராயன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தனுஷ் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.