Skip to main content

“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார். 
 

rashmika

 

 

தற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன்  ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மாணவர்களுக்கு ராஷ்மிகா வாழ்த்து

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
rashmika abut school students

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், பிளஸ் 1 - 14ம் தேதி,  பிளஸ் 2 - 6ம் தேதி வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்வு நடந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்.. ஆல் தி பெஸ்ட். அனைவரும் நன்றாக பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.