Skip to main content

"ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால்..." - ராஷ்மிகா மந்தனா வேதனை

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

rashmika post abouth how she is trolled in social media

 

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கவுள்ளார். 

 

ராஷ்மிகா நீண்ட நாட்களாக சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், திரைத்துறை பயணம் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக சில விஷயங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் சரியான நேரம் இது என நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இருப்பினும் இப்போது சொல்கிறேன்.  

 

நான் என் திரைப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பைச் சம்பாதித்து வருகிறேன். நிறைய எதிர் மறையான விமர்சனங்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறேன். நான் தேர்வு செய்த இந்தப் பயணம் மிகவும் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். அனைவராலும் ரசிக்கப்படும் நபராக இருக்க முடியாது என்றும் தெரியும்,  அதற்காக விமர்சிப்பது சரியல்ல. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் அதில் தவறில்லை. 

 

உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக நான் எவ்வளவு முயற்சி செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்  வேலையின் மூலம் உங்களை மகிழ்விப்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறேன். நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை முடிந்தவரை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். குறிப்பாக நான் சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தில் கேலி செய்யப்படுவதும், மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. மேலும் திரைத்துறையில் உள்ளவருடனும் வெளியில் உள்ளவருடனும் இருக்கும் உறவைப் பிளவுபடுத்தும் வகையில் அந்தத் தவறான செய்திகள் அமைகிறது. 

 

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அது என்னை மேம்படுத்திச் சிறப்பாகச் செய்யத் தூண்டும். ஆனால் மோசமான எதிர்மறை மற்றும் வெறுப்புடன் வரும் விமர்சனத்தில் என்ன இருக்கிறது?. நீண்ட காலமாக நான் அதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் அது இப்போது இன்னும் அதிகரிப்பதால் அதனை விளக்குகிறேன். 

 

என் மீதுள்ள தவறைச் சுட்டிக்காட்டினால், உங்களிடமிருந்து நான் பெறும் அன்பையும் அடையாளத்தையும் ஒப்புக்கொள்கிறேன். உங்களின் நிலையான அன்பும் ஆதரவும்தான் என்னைத் தொடர வைத்தது. வெளியே வந்து இதைச் சொல்ல எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. என்னைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும், இதுவரை நான் பணியாற்றியவர்களிடமும், நான் எப்போதும் ரசித்த அனைவரிடமும் மட்டுமே எனக்கு அன்பு கிடைத்தது. அதனால் அவர்களுக்காகத் தொடர்ந்து கடினமாக உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பதில் எனக்கு மகிழ்ச்சி" என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.