rashmika mandanna joined with dhanush 51th film

Advertisment

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்துத் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் மீண்டும் இந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' (Tere Ishk Mein) என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படத்தைஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. அப்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனப் படக்குழு கூறிய நிலையில் தற்போது வரை தொடங்கப்படாமலேயேஇருந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்துதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படம் தனுஷின் 51வது படமாக உருவாவதாகத்தெரிவிக்கப்பட்டது. அப்போஸ்டரைப் பார்க்கையில் மும்பையில் உள்ள தாராவி பகுதிக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இடையே நடக்கும் அரசியல் குறித்துப் பேசவுள்ளதாகத் தெரிந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் இணைந்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.