தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில்பிஸியாகநடித்து வரும்ராஷ்மிகாமந்தனா தற்போதுவம்சிஇயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அத்துடன் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன்குட்பைபடத்திலும்நடித்து வருகிறார். தென்னிந்தியசினிமாவில்முன்னணி நடிகையாக இருக்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும்நடிகைகளின்பட்டியலிலும்இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகைராஷ்மிகாமந்தனா தன்னுடைய செல்லப் பிராணியானநாய்குட்டிக்கு விமானடிக்கெட்போட்டுக்கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.இதனைப்பார்த்தநெட்டிசன்கள்பலரும்ராஷ்மிகாமந்தனாவைட்ரோல்செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இதைப் பார்த்துஅதிர்ச்சியடைந்த நடிகைராஷ்மிகாமந்தனா தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டட்விட்டர்பதிவில், "என்னுடைய வளர்ப்பு நாய் ஆரா என்னுடன் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கூட, அவள் விரும்பவில்லை. ஆரா என்னுடன் இருப்பதை விட ஐதராபாத்தில் இருக்கத்தான் விரும்புகிறாள்.உங்கஅக்கறைக்குரொம்பநன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.