Skip to main content

விஜய்க்கு ஜோடியாகும் இளம் கன்னட நடிகை?

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்று இணையத்தில் பரவி வருகிறது.
 

rashmika mandana


விஜய்யின் 64வது படத்தை இந்த பெண் இயக்குனர்தான் தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கிய சினேகா பிரிட்டோதான் விஜய்யை வைத்து தயாரிக்க இருக்கிறார்.
 

மேலும் சினேகா பிரிட்டோ, விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பது சினேகா பிரிட்டோ என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தளபதி 64’ படத்தில் அவர் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 

rashmika


மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல்கள் கசிந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தளபதி 63 இல் விஜய்யுடன் இவர் நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மாணவர்களுக்கு ராஷ்மிகா வாழ்த்து

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
rashmika abut school students

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், பிளஸ் 1 - 14ம் தேதி,  பிளஸ் 2 - 6ம் தேதி வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்வு நடந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்.. ஆல் தி பெஸ்ட். அனைவரும் நன்றாக பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.