rashmika abut school students

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், பிளஸ் 1 - 14ம் தேதி, பிளஸ் 2 - 6ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்வு நடந்து கொண்டிருக்கும் அனைவருக்கும்.. ஆல் தி பெஸ்ட். அனைவரும் நன்றாக பண்ணுங்க” என குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில் ரெயின்போ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment