Skip to main content

'வேள்பாரி'க்காக ஷங்கருடன் இணையும் ரன்வீர் சிங் - குழப்பத்தில் ரசிகர்கள்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Ranveer Singh to join hands with Shankar for velpaari novel project

 

இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் ராம்சரண் நடிக்கும் 'ஆர்சி 15' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி ஓரே சமயத்தில் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை ஷங்கர் திரைப்படமாக எடுக்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. 

 

ஏற்கனவே, சூர்யா விருமன் பட இசை வெளியீட்டு விழாவில், எம்.பி. சு.வெங்கடேசனுடன் இணைந்து ஒரு புராஜெக்ட் தொடங்கி இருப்பதாகவும் இது குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனப் பேசியிருந்தார். அதனால் சூர்யா ஹீரோவாகவும் அதனை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. பின்பு சில முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

 

இந்நிலையில், ஷங்கருடன் இந்தி நடிகர் ரன்வீர் சிங் தற்போது இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை மூன்று பாகங்களாக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

 

முன்னதாக ஷங்கரும் ரன்வீர் சிங்கும் 'அந்நியன் 2' படத்திற்காக இணைந்தனர். ஆனால் அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இந்த கூட்டணி தொடருமா?, படத்தில் ரன்வீர் சிங் எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார்? எனப் பல கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் விரைவில் ஷங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.