Skip to main content

அது உண்மை இல்லை - ரன்வீர் சிங் குறித்து வைரலாகும் புகைப்படம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Ranveer Singh driving Aston Martin with expired insurance

 

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் ரூ.3.9 கோடி மதிப்பிலான சொகுசு காரை இன்சூரன்ஸ் காலாவதியாகியும் ஓட்டி வருகிறார் என சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். "ரன்வீர் சிங் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டிவருகிறார். அதை புதிப்பிக்காமல் காரை ஓட்டும் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்" எனக் குறிப்பிட்டு ரன்வீர் கார் ஓட்டும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் மும்பை காவல் நிலைய சமூக வலைதள பக்கத்தையும் டேக் செய்திருந்தார். 

 

இதற்கு பதிலளித்த மும்பை போலீசார் "இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்" என தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ரன்வீர் சிங் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். 

 

இந்நிலையில் ரன்வீர் சிங் தனது காருக்கு சரியான முறையில் இன்சூரன்ஸ் செய்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது சம்மந்தப்பட்ட ஆவணங்கள் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆவணப்படி கடந்த ஜூலை மாதம் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனத் தெரிகிறது.   

 

ரன்வீர் சிங்கிடம் கோடிக் கணக்கிலான சொகுசு கார்கள் நிறைய இருக்கின்றன. அந்தக் கார்களில் சில சமயம் நகரங்களில் உலா வந்து கொண்டிருப்பார். சமீபத்தில் கூட தனது ரூ. 3.9 கோடி மதிப்பிலான காரை மும்பை விமான நிலையத்தில் இயக்கியபோது ரசிகர்களிடம் கவனம் பெற்று ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.