Skip to main content

ரன்வீர் சிங்கா இது? ‘83’ படத்தின் லுக்!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என தொடர் வெற்றிகளை பெற்ற நடிகர் ரன்வீர் சிங். தற்போது  ‘83’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இது 1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ஆகும்.
 

ranveer singh

 

 

அப்போது இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்ட கபில்தேவின் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்று  இதில் நடிக்கிறார். மற்ற வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தை ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோன் தான் நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 
 

இந்நிலையில் ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் அவருடைய கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. கிட்டத்தட்ட கபில் தேவ் தோற்றத்தை ரன்வீர் சிங் பெற்றிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டுக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
ranveer sing in thalaivar 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து  ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.  

Next Story

"கபில்தேவுடன் பணியாற்றுவது எனது பாக்கியம்" - ரஜினிகாந்த்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

rajini shared a photo with kapil dev

 

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

 

'லால் சலாம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் நடந்த 34 நாட்கள் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் தொடர்பான பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. 

 

சமீபத்தில் திருவண்ணாமலை ஷெட்யூலை முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அண்மையில் இப்படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.

 

இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ரஜினி மொய்தீன் பாய் கெட்டப்பில் இருக்கிறார். அருகில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் இருக்க அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் "முதன் முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது எனது மரியாதை மற்றும் பாக்கியம்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இன்று மதியம், கபில்தேவ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "இதுபோன்ற பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.