ddv

Advertisment

'36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய 'சூரரைப் போற்று' வரை வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து, அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட். இந்நிலையில் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தங்களுடைய 14-வது தயாரிப்பாக புதிய படம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கச் செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே.ஜே.ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்த ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

alt="kbjbk" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="dcb3d234-fe11-42a0-8cde-a88b1642f414" height="386" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_6.jpg" width="643" />

Advertisment

அவருடன் இணைந்து வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் நேற்று (31.01.2021) தொடங்கியது.