'ஜோக்கர்' படம் மூலம் அறிமுகமாகி 'ஆண் தேவதை' படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியன் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வந்த அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவான நிலையில் ரம்யா பாண்டியன் அடுத்தாதாக சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.