Skip to main content

15 வருடங்கள் கழித்து... கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

கடந்த 1983ஆம் ஆண்டு ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் உருவான வெள்ளை மனசு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். அப்போது அவருக்கு 14 வயது. இதன் பின்னர் படிபடியாக தெலுங்கு திரையுலகில் வளர தொடங்கினார். ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தார். 
 

ramya krishnan

 

 

கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்தார். இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படமாக அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க இருக்கிறார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 15 வருடங்கள் கழித்து வந்தே மாதரம் என்னும் படத்தின் மூலம் கணவன் மனைவி இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகின்றனர். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"அவ்ளோ ஃபயர் இருக்காது" - கதாபாத்திரம் குறித்து நெல்சன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

nelson speech jailer audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதில் நெல்சன் பேசுகையில், "இப்படத்தில் சிவராஜ் குமார் சார், ஜாக்கி ஷெராஃப் சார், மோகன்லால் சார் எல்லாருமே கேமியோ மாதிரிதான் பண்ணியிருக்காங்க. மல்டி ஸ்டாரர் சப்ஜெக்ட் கிடையாது. ஜாக்கி ஷெராஃப் சார் பார்க்கும் போது, இவரு நிஜமான ரவுடியோ என யோசித்தேன். அவரை மீட் பண்ணலாமா என கேட்டதற்கு ஃபார்ம் ஹவுஸ் வர சொன்னார். கதை பிடிக்கவில்லை என்றால் அங்கேயே கட்டி வச்சு அடிப்பாரா என பயந்தேன். பின்பு கதை சொல்ல ஆரம்பித்த பிறகு, குறுக்கிட்டு, 'ஹே... எது சொன்னாலும் ஓகே. ரஜினி சார் படம் தானே. நான் நடிக்கிறேன்' என இந்தியில் சொல்லிவிட்டார். 

 

அதே போல் சிவராஜ்குமார் சாரை பார்க்க போனேன். பீஸ்ட் ஷூட்டிங்கில் சாரை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது திடீர்னு வந்தார். பார்க்கும் போது நிஜமான கேங்ஸ்டர் நடந்து வருவது போலவே இருந்தது. அவருடைய படங்கள் நான் பார்த்தத்திலை. அதுக்கப்புறம் பார்த்தேன். அவருடைய லுக் ஸ்க்ரீனில் செம்மையா இருந்துச்சு. அதனால் அவரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தேன். பிறகு கதை சொன்ன போது ஓகே சொல்வாரா இல்லையா என டவுட் இருந்தது. இதுவரை நான் கதை சொல்லி யாரையும் ஒத்துக்க வைக்கவில்லை. 

 

ரஜினி சார் பெயர் சொல்லி தான் ஓகே வாங்கினேன். அதே போல் மோகன்லால் சாரும். ரஜினி சாரால்தான் எல்லாரும் உள்ளே வராங்க. அதனால் அதை வச்சி அவுங்கள தவறாக பயன்படுத்திட கூடாது, சரியாக காமிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ணியிருக்கேன். படம் வந்த பிறகு பாருங்கள். 

 

ரம்யா கிருஷ்ணா மேம், அவரிடம் கதை சொல்ல போகும் போது, படையப்பா மாதிரி இருக்குமா என கேட்கக்கூடாது என நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் முதல் கேள்வியே அதுதான் கேட்டாங்க. படையப்பா வேறு. இதில் அவ்ளோ ஃபயர் இருக்காது. கொஞ்சம் மென்மையான கேரக்டர்" என்றார். மேலும் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

 


 

Next Story

"நீலாம்பரி முன்னால படையப்பாவோட மரியாதைய கெடுத்துட்டாங்க" - ரஜினி

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

rajini about ramya krishnan in jailer audio launch

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

 

இதில் ரஜினி பேசுகையில், "யோகி பாபுவுடன் காரில் உட்கார்ந்து ஷூட் பண்ணிக்கிட்டு இருக்கோம். எக்ஸ்பிரஷன் ஷாட். அங்கே இருந்து மைக்கில் சொல்றாங்க. கொஞ்சம் அதிகமாகிடுச்சு, இல்ல இப்போ கம்மியாயிடுச்சு. ரொம்ப அதிகமாகிடுச்சு... இது மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. யோகி பாபு சரி சரி-னு சொல்லிட்டு பின்பு ஷாட் ஓகே ஆகிடுச்சு. அப்புறம் 'சார்... இவன் சாவடிக்கிறான் சார். ஸ்கேல் வச்சி அளவெடுத்தா நடிக்க முடியும்' என்றார். 

 

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன், 32 வருஷம் கழிச்சு இணைந்து நடிக்கிறோம். ஒரு காட்சியில், அவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுத்துட்டு பக்கத்தில் இருப்பவருக்கு ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்கணும். 8 டேக்குங்க. நீலாம்பரி முன்னால இந்த படையப்பாவோட மரியாதைய கெடுத்துட்டாங்க. படத்தில் சீரியஸ் சீனில் காமெடி வரும்" என்றார்.