Ramcharan entertaining soldiers; Photos that go viral

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ராம்சரண். 'ஆர்ஆர்ஆர்' பட வெற்றிக்கு பிறகு ராம்சரண் நடிக்கும் படம் 'ஆச்சார்யா'. இதில் தனது தந்தை சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்த இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு 'ராம்சரண் 15' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் ராம்சரண் ராணுவ வீரர்களை சந்தித்து உணவு வழங்கியுள்ளார். ஷங்கர் இயக்கும் 'ராம்சரண் 15' படப்பிடிப்பு பஞ்சாபில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இடைவெளியின் போது ராம்சரண் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் முகாமிற்கு சென்று சந்தித்து உரையாடியுள்ளார். ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment