Skip to main content

ரூ.500 கோடியில் உருவாகும் ராமாயணம்... அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்கள்...

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

பாகுபலி திரைப்பட தொடர் அடைந்த வெற்றியை அடுத்து இந்திய சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் அதிக பொருட்செலவில் இதிகாச கதைகளையும், ராஜா காலத்து புனைவுகளையும் எடுக்க முனைப்பு காட்டி வருகின்றனர். 
 

allu aravindh

 

 

தற்போது இந்தியாவின் முக்கிய இதிகாச நூல்களில் ஒன்றான ராமாயணத்தை மூன்று பாகங்களில் திரைப்படமாக உருவாக்க மது மண்டேனா, அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா என மூன்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த படங்களை டங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரியும், மாம் படத்தை இயக்கிய ரவி உத்யாரும் இயக்க இருக்கிறார்கள்.
 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று இந்த படங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும். இந்த படத்தை தயாரிக்க சுமார் 500 கோடி வரை செலவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான தேர்வு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
 

கடந்த மூன்று வருடங்களாகவே இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 2021-ஆம் வருடம் முதல் பாகத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘ராமாயணம் ஒரு கற்பனைக் கதை’ - பாடம் நடத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Action by Hindu organizations protest A teacher who conducted a lesson on Ramayana

ராமாயணம் பற்றியும், மகாபாரதம் பற்றியும் விமர்சனம் செய்ததாக ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மங்களூர் அருகே ஜெப்புநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆசிரியராக பிரபா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி, மாணவர்களிடம் பாடம் நடத்தும்போது, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை கற்பனைக் கதை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து அறிந்த இந்து அமைப்பினரும், பா.ஜ.க.வினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர் பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், நேற்று (12-02-24) மீண்டும் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர், இந்து அமைப்பினர், பா.ஜ.க.வினர் என நூற்றுக்கணக்கானோர் பள்ளியின் வாசல் முன்பு திரண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். 

மேலும், அவர்கள் மாணவர்களின் மனதில் மதவெறியை விதைக்கும் ஆசிரியர் பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, ஆசிரியர் பிரபாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.