தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய படங்களின் இரண்டாம் பாகம் எடுத்து வெளியிடுவது இந்தக்கால கட்டத்தின் ட்ரெண்டாக இருக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அந்த வரிசையில் முப்பது வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கங்கை அமரன் உருவாக்க மும்முரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி பேட்டியளித்துள்ள ராமராஜன் 'கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.