Skip to main content

”அது வேண்டவே வேண்டாம் என நினைத்தபோது லிங்குசாமி வந்தார்” - ’ தி வாரியர்’ நாயகன் ராம் பொத்தினேனி பேட்டி

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

 Ram Pothineni

 

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ’தி வாரியர்’ திரைப்படம்  கடந்த 14ஆம் தேதி வெளியான நிலையில், நாயகன் ராம் பொத்தினேனியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ’தி வாரியர்’ படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக 15 ஆண்டுகள் காத்திருந்தேன். அதற்காக தமிழ், தெலுங்கு இரண்டிலும் வரவேற்பு பெறக்கூடிய கதையை எதிர்பார்த்திருந்தேன். வாரியர் படம் மூலமாக அது நடந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த எதிர்பார்ப்பு லிங்குசாமி சாருக்கும் தெரியும். இதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறேன் என்று அவர் சொன்னார். அதனால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்வார் என்று எனக்குத் தெரியும். ஆனால், மொத்த சினிமா துறையையும் அழைத்து ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது மாதிரியான மேடையை இந்தியாவே பார்த்ததில்லை.

 

எல்லோருமே ரொம்பவும் பிஸியாக இருந்தனர். அவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ்களை ஒரே நாளில் ஒரே மேடையில் அமரவைத்தது என்பது சாதாரணமான விஷயமில்லை. லிங்குசாமி சார் எனக்காக செய்தார். வந்தவர்கள் லிங்குசாமி சாருக்காக வந்தார்கள். வந்தவர்கள் என்னைப் பற்றியும் பேசியது ரொம்பவும் மகிழ்ச்சி. 

 

லிங்குசாமி படம் என்றாலே ஆக்‌ஷன்தான் அனைவருக்கும் நியாபகம் வரும். ரொம்ப நாட்களாக போலீஸ் கதாபாத்திரம் பண்ணவில்லை என்பதால் போலீஸ் கதையாக கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லோருமே ஒரே மாதிரி கதை சொன்னார்கள். நிறைய கதைகள் கேட்ட பிறகு போலீஸ் கதையே வேண்டாம் என முடிவுக்கு வந்து வேறு கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் லிங்குசாமி சார் வந்தார். அவர் போலீஸ் கதை என்றதும், அந்தக் கதையே வேண்டாமென நினைத்தோமே என்று நினைத்துக்கொண்டே கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அவர் சொன்ன கதை ரொம்பவும் பிடித்திருந்தது. உடனே ஓகே சொன்னேன். 

 

படத்தில் கீர்த்தி ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார். இது டிஎஸ்பியுடன் எனக்கு ஏழாவது படம். அதனால் அவர் எப்படி பாட்டுக்கொடுப்பார் என்று தெரியும். படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்த டிஎஸ்பிக்கு நன்றி. நம்முடைய முதல் தமிழ்ப்படம் டப்பிங் படமாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். லிங்குசாமி சாரிடமும் அதைத் தெளிவாக சொல்லிவிட்டேன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் ஷூட் செய்தது சவாலாக இருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ராம் பொத்தினேனி படம்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

ram pothineni Boyapati RAPO update

 

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'போயபதி ராபோ' (BoyapatiRAPO). ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில், ஆக்‌ஷன் காட்சியும் ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடலைத் தவிர படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இந்த ஷெட்யூலுடன் முடிந்துவிடும். மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

 


 

Next Story

பிரபல தெலுங்கு நடிகரை இயக்கும் கௌதம் மேனன்

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

gautham menon next directing telugu actor ram pothineni movie

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள இப்படம் வெந்து தணிந்தது காடு. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து கௌதம் மேனன் கமலை வைத்து ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கௌதம் மேனன் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பணிகளை முடித்த பிறகுதான் ’வேட்டையாடு விளையாடு 2’ படத்தின் பணிகளை தொடங்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இதனிடையே கௌதம் மேனன் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகளை விரைந்து முடித்து விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம்.