'தீரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கெதிரான வதந்திகளுக்கு விளக்கமளித்து ரகுல் பேசியபோது... "இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள். அதேபோல் தெலுங்கு ரசிகர்கள் என்னை தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. இதற்காக நான் தமிழையும் கற்று வருகிறேன்.சினிமாவில் நிலைத்து நிற்க திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இல்லாத நடிகைகளை அழகாக இருந்தாலும் ஒதுக்கிவிடுவார்கள்" என்றார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் ப்ரீத் சிங்
சார்ந்த செய்திகள்
Next Story
ஸ்ரீதேவியாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங்
இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வருவது ட்ரெண்டாக மாறியுள்ளது. 'டர்ட்டி பிக்சர்ஸ்' படம் மூலம் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தற்போது 'நடிகையர் திலகம்' படம் வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்திய சினிமாவின் 80களில் கொடிகட்டி பறந்து, பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தற்போதுள்ள நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை நடிகை ரகுல் பிரீத் சிங் தட்டி சென்றுள்ளார். ஆனால் முழு நீள படத்துக்காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Next Story
நான் அவரை ஒதுக்கவில்லை... ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கைவசம் மூன்று படங்கள் வைத்துள்ளார். இதில் நடிகர் சூர்யாவின் என்.ஜி.கே, மற்றும் கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத இரண்டு படங்கள் என மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை ரகுல் தன் தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்தது பற்றி சமீபத்தில் பேசியபோது..."சினிமாவில் வெற்றி கொடுப்பது முக்கியம். தோல்வி படங்களில் நடித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. சினிமாவில் வெற்ற, தோல்விகள் யார் கையிலும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் கஷ்டப்பட்டு எடுக்கிறோம். ஆனாலும் சில படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் வெற்றி, தோல்விக்கான காரணம் யாருக்கும் தெரிவது இல்லை. இதற்காக சினிமாவில் உழைத்தவர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது. யாரும் தோல்வி படம் எடுக்க நினைப்பது இல்லை. நன்றாக ஓடும் என்று எதிர்பார்க்கிற படங்கள் தோல்வி அடைவதும், ஓடாது என்று நினைக்கிற படங்கள் வெற்றி பெறுவதும் இங்கு நடக்கின்றன. வெற்றி, தோல்வியை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட படங்களை விரும்புகிறார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. நான் தோல்வி படம் கொடுத்த இயக்குனர்களை ஒதுக்குவது இல்லை" என்றார்.