Skip to main content

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மீண்டும் சம்மன்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

Rakul Preet Singh summoned by the Enforcement Directorate again

 

பெங்களூரில் கடந்த 2017ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் கால்வின் மஸ்கரென்ஹாஸ் உள்ளிட்ட இருவரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். ​​இந்த போதைப்பொருள் சம்பந்தமாகத் தெலுங்கு திரையுலகைச் சார்ந்த ரவி தேஜா, சார்மி கவுர், நவ்தீப், முமைத் கான், தனிஷ், நந்து, தருண் மற்றும் பாகுபலி புகழ் ராணா டக்குபதி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஒரு விருந்து நிகழ்ச்சியில் தெலுங்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியானது. 

 

இந்த போதைப்பொருள் பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை. விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது மட்டுமின்றி கோடிக்கணக்கில் பணம் கைமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல நடிகர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுல் ப்ரீத் சிங்கை அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். 

 

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
pm modi wishes rakul preet singh

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், பிரதமர் மோடி தங்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வாழ்த்து கடிதத்தில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் வாழத் தொடங்கும் ஜாக்கியும் ரகுலுக்கும் எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். தம்பதியரின் மனம் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கட்டும். எப்பொழுதும் அருகருகே இருந்துகொண்டு, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்கும் முயற்சியில் ஒருவரையொருவர் கைகோர்த்து, சிந்தனையோடும் அன்போடும் பொறுப்புகளை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தில் சரியான தம்பதிகளாக இருக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.