உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 210 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. இதனிடையே கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

Advertisment

jfjfg

ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த லாக்டவுனால் அடிப்படைத் தேவைகள் இன்றி கஷ்டப்படும் 200 ஏழை குடும்பங்களுக்குச் சமீபத்தில் தினசரி உணவு வழங்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான முறையில் கரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்து, அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment