நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும், 'சிவா மனசுல சக்தி' புகழ் ராஜேஷ் எம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளர். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் புதிய நாயகி!
சார்ந்த செய்திகள்
Next Story
ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் வெற்றிக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும், 'சிவா மனசுல சக்தி' புகழ் ராஜேஷ் எம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான் கவனிக்கிறார். இப்படத்தில் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படம் குறித்து ஆலோசிப்பதற்காக சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் இருவரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை நேற்று சந்தித்தனர். அப்போது முன்று பேரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.