பிரபல கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி அவனே ஸ்ரீமன்நாராயனா என்னும் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பலருக்கும் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ரக்ஷித் ஷெட்டி யாருடன் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரக்ஷித். ஹேமந்த ராவ் என்பவரின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் நடிக்க இருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி. அந்த படத்திற்கு ‘சப்த சாகரதாச்சே யெல்லோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஹேமந்த் ராவ், ரக்ஷித்துடன் இணைந்து ஏற்கனவே ‘கோதி பன்னா சாதாரண மைகாட்டு’ என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம்தான் தமிழில் 60 வயது மாநிறம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.