Skip to main content

'தனுஸ்ரீ தத்தா படப்பிடிப்பில் அதிக போதையில் இருந்தார்' - தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாருக்கு ராக்கி சாவந்த் பதிலடி  

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
rakhi sawant

 

நடிகைகள் பலரும் தைரியமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வாய் திறந்து வரும் நிலையில் தற்போது விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தில் நடித்தபோது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன் குடும்பத்தினருடன் சென்றபோது நானாபடேகர் ஆட்கள் தன்னை தாக்கினார்கள் என்றும் புகார் கூறியிருந்தார்.மேலும் நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். தனுஸ்ரீ தத்தா கூறிய இந்த பாலியல் புகாருக்கு பல்வேறு பாலிவுட் நடசத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தனுஸ்ரீதத்தாவை விமர்சித்து நடிகை ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார். அதில்....

 

 

 


"தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா நான்கு மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்" என்றார். இதற்கிடையே கடந்த 2008ல் படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே தனுஸ்ரீதத்தா காரை சிலர் கும்பலாக சேர்ந்து உடைத்தும் டயரை கிழித்தும் சேதப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்