Skip to main content

மூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை? - ராஜு முருகன் கண்டனம்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
vS


கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெருக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
 


இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியப் பிரபலங்களும் இந்த ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்ற நிலையில் இந்த நிறவெறி தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இயக்குனர் ராஜு முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"ஒரு மனிதனின் மூச்சுக் குழாயை இன்னொரு மனிதன் நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை?

நிற வெறியால்
இன வெறியால்  
சாதி, மத வெறியால் 
நமது குரல்வளையை அறுத்து எறியத்தான் எத்தனை வெறி கூட்டங்கள்.
 

 


உலகின் தலைவனாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு செயல்படும் அமெரிக்கா, பல நாடுகளில் போர் வெறியை வளர்த்து, ஆயுத வியாபாரம் செய்கிறது. தன் நாட்டிலும் அடிமையதிகார வெறி அரசியல் செய்கிறது. அதன் பிரதிநிதிதான் அந்த இரக்கமற்ற போலீஸ். ஆதிக்கத்திற்கு எல்லைகள் கிடையாது. ஆதிக்கத்தின் மொழி அடக்குமுறை தவிர வேறு கிடையாது. எல்லா வடிவத்திலும் ஆதிக்கம் வீழ்த்துவோம். மனித குலத்தின் சமத்துவ எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் தோழர்களே!

மனிதம் வெல்லட்டும்'' எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பான் படக்குழு தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

madras high court order illegal sites banned japan movie release

 

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு  தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நாளை (10.11.2023) வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தை சட்ட விரோதமாக 1077 இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இப்படம் இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 


 

Next Story

"இங்கு திருடனுக்கு ஒரு ரகம் இருக்கிறதா" - ஜப்பான் குறித்து கார்த்தி

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

karthi about japan

 

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 

 

இந்தநிலையில் படம் பற்றி கார்த்தி பேசுகையில், "நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான பயணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படமும் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துக் கடந்து வந்திருக்கிறேன். தவறுகள் செய்யும்போது சரி செய்ய முயற்சித்திருக்கிறேன். இந்தப் பயணம் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதனால்தான் 17 வருடங்களில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். முதலில் மக்களின் அன்பைப் பெறுவதே மிகப்பெரிய விஷயம். நம்மை பிடிக்க வைக்க முடியாது. நாம் இயல்பாக இருப்பது மக்களுக்குப் பிடிக்க வேண்டும். அப்படி அமைந்தது பெரிய ஆசிர்வாதம். 

 

25வது படம் மட்டுமல்ல, என் ஒவ்வொரு படமுமே ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி இந்தப் படம் அமைந்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் மாதிரியான அழுத்தமான எழுத்தாளர், இலக்கிய வாசிப்பு இருப்பவர்கள் சினிமாவுக்கு வரும்போதுதான் நமக்கு வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்கள், சூழல்கள் கிடைக்கும். இந்த ஜப்பான் கதாபாத்திரத்தை அவர் எங்கு பார்த்திருப்பார், எப்படி இதை உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட்டேன். 

 

அவர் கம்யூனிச சித்தாந்தத்தைக் கொண்டவர் என்பதால் ஜோக்கர், குக்கூ என அவர் படங்களில் பொதுநலன் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசியிருக்கிறார். அவர் நினைப்பதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தில் சொல்லலாமே என்று யோசிக்கும்போதுதான் ஜப்பான் அமைந்தது. அவர் இயல்பிலேயே வழக்கமான கதைகளை படமாக எடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் தான் இருக்கிறார். அதனால்தான் நிதானமாகத் தேடித் தேடிப் படம் எடுக்கிறார். கண்டிப்பா, இதில் அவர் பாணியில் ஒரு விஷயம் இருக்கிறது. அது மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஜப்பான் கெட்டவன் தான், ஆனால் இங்கு திருடன் என்று தனியாக ஒரு ரகம் இருக்கிறதா என்பதே ஜப்பானின் கேள்வி. இதைத்தான் ராஜு முருகன் சொன்னார். அந்தக் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த மாதிரியான விஷயங்கள் தான் எனக்கு ஆர்வத்தைத் தூண்டின" என்றார்.