Skip to main content

ரஜினி படம் வெளியாகுமா? சிக்கலில் தயாரிப்பு நிறுவனம்...

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0 . கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி இப்படம் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். 
 

2.o

 

 

500 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், எதிர்பார்த்த வசூலை வாரிக்குவிக்காமல் போனது. இதனால் சீனாவில் ரிலீஸ் செய்யும்போது அதிக திரைகளில் வெளியிட்டு வசூலை வாரிக்குவித்துவிடலாம் என்று கணக்குப்போட்டது தயாரிப்பு நிறுவனம். சொன்னதைபோலவே சுமார் 56,000 ஸ்கிரீன்களில் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழ் படம் ஒன்று சீனாவில் வெளியாகுவது இதுவே முதல் முறை என்கிற சாதனையை படைக்க இருந்தார் ரஜினி. 
 

2.0 படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்தனர். ஹெச்ஒய் மீடியா நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த முடிவில் இருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.காரணம், இதற்குமுன் சீன மொழியில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம், சீனாவில் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும். ஆனால், 2.0 வெளியாகும் சமயத்தில் ‘தி லயன் கிங்’ படத்தையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதால், படத்தை வெளியிட்டு நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, வெளியிடாமல் குறைந்த அளவு நஷ்டத்தைச் சமாளிக்கலாம் என்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.