நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாகும், அதுகுறித்த விவரங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் இன்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, தனதுஅரசியல் வருகைகுறித்துபேட்டியளித்தார். அப்போது,அண்ணாத்தபடத்தைமுடித்துவிட்டுகட்சிப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனதுசெய்தியாளர் சந்திப்பில், "அண்ணாத்த படத்தில்எனக்கு இன்னும் 40% பணிகள்மீதமுள்ளன. அதை முடித்து தர வேண்டும்.அதை முடித்து தர வேண்டியது என்னுடைய கடமை. அண்ணாத்தபடத்தைமுடித்துதந்துவிட்டு கட்சிப்பணிகளில் இறங்குவேன்" எனகூறினார்.
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி, 'அண்ணாத்த' படத்தின்படப்பிடிப்பைமுடித்துவிட்டு கட்சி பணிகளில் இறங்குவேன் என அறிவித்திருப்பதால், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.