Skip to main content

"நம் செல்வங்களை கொள்ளையடித்து நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்" - ராஜ்கிரண் கட்டம்!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
rhdh

 

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் இயக்குனருமான ராஜ்கிரண் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"நம் இந்திய நாடு,
விவசாயப்பொருளாதாரத்தை
அடிப்படையாகக்கொண்டது...

 

சுதந்திரத்துக்குப்பின்,
நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின்
தவறான கொள்கை முடிவுகளால்,

 

மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள்,
பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி
என்ற பெயர்களால், 
மிகவும் தந்திரத்துடன்,
உரம், பூச்சிக்கொல்லி,
வீரிய கலப்பினம் என்ற பெயர்களில்
விஷத்தை நம் கைகளாலேயே 
போட வைத்து, நம் செல்வங்களை
கொள்ளையடித்ததோடு,
நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்..

 

அதன் காரணமாக,
இன்று நம் விவசாயப்பெருமக்கள்,
வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,
தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்...

 

விவசாயத்தொழிலை
ஆதாரமாக வைத்து இயங்கிய
சிறு, குறு வணிகப்பெருமக்களும்
வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

 

இது போக, 
விவசாயம் பொய்த்துப்போனால்,
விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு
விலைக்கு வாங்கி, 
நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும்,
கனிம வளங்களை, 
அரசியல்வாதிகளின் துணையோடு
கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் 
முயன்று கொண்டிருக்கின்றனர்...

 

நாம் விழித்துக்கொள்ள வேண்டிய
கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம்.

 

நம்மாழ்வார் ஐயா அவர்கள்,
காட்டிச்சென்ற வழியைப்பின்பற்றி,
இயற்கை விவசாயத்துக்கு மாறி,
நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக்கூட்டு முறையில்
வருமானத்தைப்பெருக்கி,
விவசாயபெருமக்கள் தலை நிமிர்ந்து
மகிழ்ச்சியோடு வாழ,
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்...

 

இவ்வொரு அடி, மண்ணும்,
அதனுள் இருக்கும் கனிம வளங்களும்,
நம் மூதாதையரின் கடின உழைப்பால்
நமக்கு கிடைத்த பொக்கிஷம்...

 

அவற்றை நம் சந்ததியினருக்காக
பேணிப்பாதுகாக்க,
இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்...

 

அனைவருக்கும்
என் மனம் கனிந்த
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.

 

வாழ்க வாழ்க" என ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்னுடன் போராட்டத்துக்கு வந்தாரா?" - ராஜ்கிரண் கருத்துக்கு சீமான் பதில்

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

seeman about rajkiran

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்றிருந்தார். 

 

இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் பதிவு வைரலானது. அந்தப் பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

 

இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் ராஜ்கிரண் கருத்து குறித்து சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியது, "என்னுடைய வலி அவருக்கு இருக்கிறதா. அது பற்றி பேச தேவையில்லை. சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா என தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்க கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார்.  

 

 

Next Story

"விளைவு மிக மோசமாயிருக்கும்" - எச்சரித்த ராஜ்கிரண்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

rajkiran viral post

 

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த சூழலில் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று., அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" எனப் பேசியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

மேலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, "அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதற்காக சீமான், மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

 

இதனிடையே நடிகர் ராஜ்கிரண் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவு, "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

 

இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.