‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!   

rajini

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சமீபத்தில் ஹைதராபாத் விரைந்தது.

இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் சென்னை திரும்பவுள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்த வாரத்தில் டப்பிங் பணிகளில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து, வழக்கமான தன்னுடைய மருத்துவப் பரிசோதனைக்காக அடுத்த மாத தொடக்கத்தில் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே நிறைவுபெற்றுள்ளன. இன்னும் படமாக்கப்பட வேண்டிய பிற நடிகர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஓரிரு வாரத்தில் முடித்துவிட்டு சென்னை திரும்பும் திட்டத்தில் படக்குழு உள்ளது.

ACTORS RAJINIKANTH
இதையும் படியுங்கள்
Subscribe