Rajinikanth praises Parthiban and iravin nizhal

'ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்குமத்தியில் வெளியான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் பார்த்திபனை பாராட்டிவாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார். அதில், “இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், மற்றும் அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கும்... முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்எனது மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment