Skip to main content

'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

rajinikanth invited to stalin autobiography book launch

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையை வெளியீட்டு விழாவில், இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையான உங்களில் ஒருவன் (பாகம் 1) வெளியீட்டு விழா, வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. 

 

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர். பாலு முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  'உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, புத்தக வெளியிட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, வரவேற்புரை ஆற்ற, முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்புரை ஆற்றவுள்ளார்.

 

இந்நிலையில் முதல்வரின் 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த்திற்கு பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இவ்விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனம் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.