"கனவில்கூட நான் அப்படி நினைக்கவில்லை..." நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

rajinikanth

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படத்தை தீபாவளி தினத்தன்று திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள படக்குழு, இறுதிக்கட்டப்பணிகளை அதற்கேற்ப முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள 'அண்ணாத்த... அண்ணாத்த...' என்ற அறிமுகப்பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி. பாடியுள்ளார். இது மரணமடைவதற்கு முன்பு எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலாகும். இதைக் குறிப்பிட்டு இப்பாடலை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ACTORS RAJINIKANTH
இதையும் படியுங்கள்
Subscribe