கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.