இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் முதல் பாடலானபத்தல பத்தல பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள “ஒன்றியத்தின் தப்பாலேஒன்னியும்இல்ல இப்பாலே சாவி இப்போ திருடன் கையிலே" என்ற வரிகள் நேரடியாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி கமல் மீது புகாரும்அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டுவிழா நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.