rajini returns chennai from maldives

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisment

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் அனிருத் இசையில் உருவாகும் ஜெயிலர் படத்தின் 'காவாலா', 'ஹுக்கும்' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சூழலில், நேற்று வெளியான மூன்றாவது பாடலும் 'ஜூஜூபி', பலரது கவனத்தைப் பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (28.07.2023) 28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவிற்குச் சென்றிருந்த ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment