ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் குறித்து ரஜினி - ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்

11:48 AM Oct 05, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தனது கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை வருடங்களாக மாற்றியது. மேலும் எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விருப்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கரும் இப்படத்தை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன்1 கவருகிறது. வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். மணிரத்னம் சார், ஃபிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மறுபடியும் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் சிறப்பு." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT