Skip to main content

ரஜினி சென்றார்... பட டைட்டில் வந்தது...! ரஜினி பட டைட்டில் வெளியானது

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காலா' படத்தையடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, குரு சோமசுந்தரம் உட்பட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன்மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஜினிகாந்த் ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் உத்தரகாண்டில் நடந்த அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட பின்னர் சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் அரசியல் பணிகளை கவனித்தார். இதையடுத்து  மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்த அறிவுரை புத்தகத்தையும் வெளியிட்டார்.

 

 

 

இந்நிலையில் தற்போது 3வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் நேற்று லக்னோ புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து இந்த மாதம் இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடப்பதாகவும், அத்துடன் படப்பிடிப்பு நிறைவு கட்டத்துக்கு வந்து விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில்  இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தலைப்பு ஆகியவை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் கடந்த இரண்டு மாதங்களாக படத்திற்கு பல்வேறு பெயர்களை பரிசீலித்து, படத்தின் பெயரை தேர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில் படத்திற்கு "பேட்ட" என்று பெயர் சூட்டியுள்ளனர். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது படத்தின் மோஷன் போஸ்டரோடு சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...? உண்மை நிலவரம் இதோ..!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vp

 

பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.

 

 

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர். 

 

 

Next Story

பேட்ட திரைப்படத்தின் FDFS மக்கள் கருத்து...!